Wednesday 30 March 2011

அம்மாவின் சமையல் முதலாம் ஆண்டு


 
 
8 Votes
தேவையான பொருட்கள்:
  • காலிப்பிளவர்    - 1
  • பாசிப்பருப்பு      - 200 கிராம்
  • வெங்காயம்      – 250 கிராம்
  • தக்காளி         – 250 கிராம்
  • பச்சை மிளகாய்  – 10
  • சீரகத்தூள்        - 1/2 ஸ்பூன்  
  • சோம்புத்தூள்     - 1/2 ஸ்பூன்
  • மஞ்சத்தூள்      -  1/4  ஸ்பூன்
  • சீரகம்           -   1/2  ஸ்பூன்      
  • உப்பு       - தேவைக்கு
தாளிக்க:
  • வரமிளகாய்    - 5
  • பட்டை, இலை, மிளகு – சிறிது
  • எண்ணெய்  – தேவைக்கு
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி         
                                                                                                                                                                                                                                      
 
 
 
 
 
 
 
 
 
 
செய்முறை:
  • ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும்.
  • பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்)  சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்)                                                    
  • காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு,  சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  • வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.  
 
 
13 Votes

கோலம் – 6

 
 
10 Votes
தேவையான பொருட்கள்;
  • சிக்கன் (கொத்துக்கறி)       –  250 கிராம்
  • இஞ்சி ,  பூண்டு விழுது   – 2 ஸ்பூன்    
  • பச்சை பட்டாணி            – 1 கப்
  • பட்டை,லவங்கம்,கிராம்பு – தலா 2      
  • தக்காளி                      -   2
  • வொங்காயம்           – 3
  • பச்சை மிளகாய்    – 5
  • மிளகாய் தூள்          - 1  ஸ்பூன்
  • மல்லித்தூள்           - 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்            – 1/4   ஸ்பூன்
  • கரம்மசாலாத்தூள்      – 1 ஸ்பூன்
  • உப்பு                         -  தேவைக்கு
  • எண்ணெய்            - தேவைக்கு
  • கொத்தமல்லி      - தேவைக்கு
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வொங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு  மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், காரம்மசாலாத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்கு வதக்கி  சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால்  மிகவும் சுவையான பட்டாணி சிக்கன் கைமா ரெடி.
குறிப்பு:
  • சிக்கனை தனியாக வேக வைத்தும் சேர்க்கலாம்.
  • காளான், உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
 
 
4 Votes
பொங்கல் அன்று இரண்டு பானைகளில் பொங்கல் வைக்கப்படும் சக்கரைப்பொங்கல் மற்றும் வெண்பொங்கல் இந்த வெண்பொங்கலுக்காக வைக்கப்படுவதுதான் பலகாய்குழம்பு. பார்த்து பார்த்து பக்குவமாக வைக்கும் போது கூட சில குழம்புகள் சுவையாக இருக்காது ஆனால் உடனடியாக வைக்கப்படும் இந்தகுழம்பின் சுவை!!!!!!!!! சொன்னால் புரியாது சுவைத்தால் தான்  அதன் சுவையை உணர முடியும்.  எனது அம்மா பொங்கல் அன்று வைக்கும் பலகாய்க்குழப்புக்கு நான் அடிமை.

தேவையான பொருட்கள்:

  • மொச்சைக் காய்   – 200 கிராம்
  • பறங்கிக்காய்       - 250 கிராம்
  • கத்தரிக்காய்       – 200 கிராம்
  • அவரைக்காய்      – 200 கிராம்
  • தட்டப்பயத்தங்காய் – 200 கிராம்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம்
  • உருளைக்கிழங்கு    - 200 கிராம்    
  • தக்காளி            -  100 கிராம்
  • சின்ன வெங்காயம்  - 100 கிராம்
  • ப.மிளகாய்          -  10
  • வரமிளகாய்         - 10
  • பாசிப்பருப்பு         - 200 கிராம்
  • மஞ்சள்த்தூள்       - 1 ஸ்பூன்
  • எண்ணெய் (அ) வெண்ணைய்  (தேவைக்கு)
  • உப்பு      - தேவைக்கு
  • கறிவேப்பில்லை , கொத்தமல்லி – சிறிது
காய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும்.

 

 

 

 

 

 

 செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • பருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)
  • காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.

 குறிப்பு:

  • ஒரு பாத்திரத்தில் பச்சரியை (1 உலக்கு) போட்டு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கினால் வெண்பொங்கல் ரெடி.
  • இந்த பொங்கலுடன் பலகாய்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
  • இந்த குழம்பை மறுநாள் தோசை அல்லது பழைய சாதத்துக்கு தோட்டுகிட்டால் அதன் சுவை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!! நீங்க செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்ப தெரியும் இதன் சுவை.  
 
 
6 Votes
கிராமங்களில் பொங்கல் அன்று காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் முதலில்”””பால் பொங்கிருச்சா”””  என்று தான் கேட்பார்கள் அதற்க்கு மற்றவர்கள்”””பால் பொங்கிருச்சு””” என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்று திருப்பி கேட்பார்கள். இது மிகவும் சுவையான அனுபவம். சக்கரைப் பொங்கல், வென்பொங்கல், பலகாய் குழம்பு என்று இம் மூன்றையும் செய்து கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக உண்பார்கள். அந்தநாளில் இருக்கும் இன்பம் அந்த ஆணடு முழுவதும் இருக்கும் என்பது நம்மிக்கை. சரி நாமும் பொங்கல் வைப்போமா!!!!!!!
 
தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி   – 1/2 கிலோ
  • பாசிப்பருப்பு – 200 கிராம்
  • வெல்லம்  – 1 கிலோ
  • பால்  – 1/2 லிட்டர்
  • நெய்   – 100 கிராம்
  • முந்திரி – 100
  • சுக்கு – சிறிது         
  • ஏலக்காய்  – 10
  • தேங்காய் – 1
முதலில் செய்யவேண்டியவை:
  • அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
  • பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
  • முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  • பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.

பால் பொங்கிருச்சா!!!!!!

 
 
5 Votes

No comments:

Post a Comment