Wednesday 30 March 2011

பப்பாளி ஜூஸ்


பப்பாளி ஜூஸ்

papaya1

1. எளிதில் கிடைக்கக்கூடியமிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி.பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும்மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் ’ சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் சி’ கூடும். பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின்சியும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பிமற்றும் நியாசினும் உண்டு. நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

2. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால்குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்புசெரிமானமின்மைஅமிலத்தொல்லைமலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளிநிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும்பப்பாளியிலுள்ள பப்பாயின்’ என்சைம்களில்ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும்ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

3. இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில்,நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும்வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

papaya
4. பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை,புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ஆண்டிபயாடிக் மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர் பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும்,ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.
5. முகப்பரு உள்ளவர்கள்பப்பாளித் துண்டுகளை மென்மையாகமுகத்தில் தேய்க்கவேண்டும். இது முகப்பருக்களைப் போக்கிமுகச்சுருக்கங்களையும் நீக்கிபொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப்பழத்தின் விதைகள்குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும்நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. நல்ல மலமிளக்கியாகவும்பித்தத்தைப்போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள்,மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.
 தேவையான பொருட்கள்
  • பப்பாளி பழம் -   1
  • பால்                    -   1  கப்
  • தண்ணீர்          -   2 கப்
  • சர்க்கரை           5 ஸ்பூன்
  • தேன்          1 ஸ்பூன்
  • ஐஸ் கட்டி    5 (தேவைக்கு)

செய்முறை

papaya-juice2

  • பப்பாளி பழம் , பால், சர்க்கரை, தேன், ஐஸ் கட்டி, தண்ணீர்  அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டுநன்கு அரைக்கவும்.
  • சுவையான  பப்பாளி ஜூஸ் தயார்.

No comments:

Post a Comment