முருங்கக்காய்-கத்திரிகாய்-மாங்காய் சாம்பார்
April 1, 2009 KALPANA K ஆல்
தேவையான பொருட்கள்
- துவரம்பருப்பு - 1 கப்
- முருங்கக்காய் - 2
- உருளைக்கிழங்கு - 3
- கத்திரிகாய் - 5
- மாங்காய் - 1 (கிளிமூக்கு மாங்காய்)
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி - 2
- பச்சைமிளகாய் – 2
- பூண்டு - 5 பல்
- மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
- சாம்பார்த்தூள் - 3 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
தாளிக்க
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு,உளுந்து – 1/2 ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை
- ஒரு கனமான பாத்திரத்தில் துவரம்பருப்பை (நன்கு கழுவிடவும்) போட்டு பருப்பு மூழ்கும் அளவிற்க்கு தண்ணிர் விட்டு அதனுடன் மஞ்சத்தூள், சீரகம் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு 10 நிமிடம் வேகவைக்கவும்.
- பிறகு நறுக்கிய முருங்கக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிகாய், மாங்காய் போட்டு வேக வைக்கவும். ( காய் போடறதுக்கு முன்னாடி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்-காய் போட்ட பிறகு ஊற்றினால் காய் சரியா வேகாது+சாம்பார் சுவையாக இருக்காது )
- காய் வெந்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அத்துடன் தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் அவ்வளவுதான் சுவையான சாம்பார் தயார்
குறிப்பு:
- பருப்பை குக்கரில் வேகவைத்தால் சாம்பாரின் சுவை முழுமையாக கிடைக்காது. (இது எனது கருத்து மட்டும் அல்ல அனுபவம்)
- பாத்திரத்தில் பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பருப்பு வேகும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் போதும் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
- மாங்காய் சேர்ப்பதால புளி தண்ணி தேவையில்லை.
- பொருங்காயம் தேவையென்றால் தாளிக்கும் போது சிறிது போடலாம்.
சைவம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அறுசுவை, உருளைக்கிழங்கு,கத்திரிக்காய், சாம்பார், மாங்காய், முருங்கக்காய் | 1 மறுமொழி
No comments:
Post a Comment