Wednesday 30 March 2011

மோர்க் குழம்பு


மோர்க் குழம்பு

thayer
இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால்சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால்தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91%உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். தயிரில் உடலுக்கு அழகைத் தரும்அழகு வைட்டமின்‘ என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்கவும், கண்வலிகண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் கண் நோய்களும் குணமாகும்.
 பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும்குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.
 தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.
 பங்குசந்தையில் விருப்பம், ஆர்வம் உள்ளவர்கள் இங்கு  (http://top10shares.wordpress.com/ ) சென்று  பயன்பெறவும்.
 பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டால். எல்லோரும் டீகாபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச்சொன்னார்கள்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசைவயிறுகுடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம்,இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்துவருகிறது. தினமும் தயிரும் மோரும் சேர்த்தால் குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுமஞ்சள் காமாலைசொறி சிரங்குதூக்கமின்மை,மலச்சிக்கல் முதலியவை  விரைந்து குணமாகும்.
 சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம்இவற்றில் உள்ள கால்சியமும்,பாஸ்பரஸும்தான். சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீகாபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழிகாட்டும்.
cucumber-thayer
 தேவையான பொருட்கள்
  •  தயிர்     -  2 கப்
  • வெள்ளரிக்காய் (அ) கேரட்  1 கப் ( நறுக்கியது )
  • சீரகம்  1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1/2  ஸ்பூன்
  • துவரம் பருப்பு  2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்  100  ( நறுக்கியது )
  • தக்காளி – 2 ( நறுக்கியது )
  • பச்சை மிளகாய்- 2
  • வரமிளகாய் – 3
  • பெருங்காயம் – சிறிதளவு
  • தேங்காய் துருவல்  1/2   மூடி
  • இஞ்சி  - சிறிய நெல்லிக்காய் அளவு
  • பூண்டு       6 பல்
  • கறிவேப்பிலை  சிறிது
  • கொத்தமல்லி தழை – சிறிது
  • கடுகு உளுந்தம் பருப்பு – தாளிக்க
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

 செய்முறை
 முதலில் தயிர்வுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
 பின்பு தேங்காய் துருவல்பச்சை மிளகாய்சீரகம்இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பையும் ஊறவைத்து நெறு நெறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 பின்பு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்தப்பருப்புகறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம்தக்காளிவெள்ளரிக்காய் (அ) கேரட் சேர்த்து நன்கு வதக்கி.
 பின்பு அரைத்த கலவையை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் கலவையில் கடைந்த தயிரையும் அரைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கி ஒரு கொதி வருவதற்க்குள் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்கறிவேப்பிலைபெருங்காயம்மஞ்சள் தூள் ஆகியவற்றை தாளித்து மோர்க்குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
 சுவையான மோர் குழம்பு தயார்.

No comments:

Post a Comment