எள்ளு உருண்டை
மார்ச் 4, 2009 KALPANA K ஆல்
எள்ளு உருண்டை சத்தாண உணவு பொருள், அந்தக்கால குழந்தைகளின் ஆரோக்கியத்திர்க்கு தாய்மார்கள் கொடுக்கும் நொருக்குத்தினியில் எள்ளு உருண்டைக்கு முதல் இடம் என்று என் அப்பத்தா கூறினார்கள். உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- வெள்ளை எள் – 4 கப்
- சர்க்கரை - 3 கப்
- ஏலக்காய் - 6
- நெய் - தேவைக்கு
செய்முறை – ஒன்று
- வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (நைசாக அரைக்காமல் சிறிது மொற மொறப்பாக அரைக்கவும் ) .
- அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முழு எள்ளிள் ( பார்ப்பதர்க்கு அழகாக இருக்கும் ) ஒரு பிரட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
மிகவும் சுவையான, சத்தாண எள்ளு உருண்டை தயார்.
செய்முறை – இரண்டு
- வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும்.
- பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நமக்கு பிடித்த வடிவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.
மிகவும் சுவையான, சத்தாண எள்ளு உருண்டை தயார்.
No comments:
Post a Comment