Friday, 1 April 2011

பேரழிவுகளும் பாவமன்னிப்பும்





நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை -நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8 : 25)

பேரழிவுகள் ஏன்?

அல்லாஹ்வை புறக்கணித்து, அவன் வல்லமையை மறந்து, பல பாவங்களையும் புரியும் நன்றிகெட்ட மனிதர்கள் இப்பூமியில் வாழும்போது, இயற்கை சீற்றங்களான புயல், சூறைக்காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, எரிமழை தாக்குதல் போன்றவற்றால் அல்லாஹ்வின் கோபச் சோதனையை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,

போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,

ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,

தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,

கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,

பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,

தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,

அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,

ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,

ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,

ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது

ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,

மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,

இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது

இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். அறிவிப்பவர் : அபூஹூரை (ரழி) நூல் : திர்மிதி 

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3 : 89)

நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4 : 147)

பாவமன்னிப்பு

தவ்பா (பாவமன்னிப்பு) செய்யும் போது தூய மனதுடன் இனி அத்தகைய பாவங்களில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்திக்க வேண்டும். 

நம் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் மன்றாடும் போது நாம் அடையும் சோதனை மற்றும் 
வேதனைகளிலிருந்தும் துன்ப துயரங்களிலிருந்தும் நாம் மீட்சி பெற இயலும்.

பாவமன்னிப்பு கோரல் பற்றி திருக்குர்ஆன்

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான் (திருக்குர்ஆன் 66 : 8)

......''எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 7 : 23)

''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! ....'' (திருக்குர்ஆன் 2 : 186)

மேலும், ''எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! ....'' (திருக்குர்ஆன் 3 : 147)

.... ''எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்'' (திருக்குர்ஆன் 23 : 109)





-- 

முகப்பரு தழும்பு மாற!





முகப்பரு தழும்பு மாற!


உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது. இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது.
சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும்.  இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.
முகம் பொலிவு பெற:
வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.
கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்
சந்தனத் தூள் - 5 கிராம்
வசம்பு பொடி - 2 கிராம்
எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.
முகச்சுருக்கம் மாற:
ஆவாரம் பூ காய்ந்த பொடி - 5 கிராம்
புதினா இலை காய்ந்த பொடி - 5 கிராம்
கடலை மாவு - 5 கிராம்
பயத்த மாவு - 5 கிராம்
எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.
வெள்ளரி - 2 துண்டு
நாட்டுத் தக்காளி - 1 பழம்
புதினா - சிறிதளவு
எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும். இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.
முகம் பளபளக்க:
காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
முகப்பரு தழும்பு மாற:
புதினா சாறு - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்
இவற்றில் பயத்த மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.
ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற:
ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.
கொத்தமல்லி - 5 கிராம்
புதினா - 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
நன்றி:"உங்களுக்காக"                                                                                             முகம்மது சுல்தான் 

தமிழக காவல்துறையில் முஸ்லிம்கள்…!



உலகில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத பல சிறப்புகள் நம் நாட்டிற்கு உண்டு. இன, மொழி, பிராந்திய, மத ரீதியான மக்கள் கூட்டம் கடந்த 63 வருடங்களாக ஒரு நாடாக ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் காட்சியை வேறு எங்கும் காண இயலாது. மக்களாட்சி நடைபெற்று வரும் நம் நாட்டில் அரசியல் அதிகாரம், நாட்டின் வளம் போன்ற அனைத்தும் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இன, மத, மொழி ரீதியாக எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று ஆட்சியாளர்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வழிகாட்டுகிறது. இதன் அடிப்படையில் அரசுப்பணிகளில் எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் ஜனநாயக மரபு. அதுதான் சமூக நீதி.
விடுதலை இந்தியாவில் இந்திய சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது என்பது நாம் போற்றி பெருமைப்படும் ஜனநாயக மக்களாட்சி தத்துவத்திற்கு ஊறு விளைவிப்பதாகும்.
அதுவும் குறிப்பாக பாதுகாப்புத் துறைகளில் எல்லா சமூகமும் இடம் பெற்றால்தான் அந்தந்தச் சமூகம் அடக்குமுறைகளில் இருந்தும் ஆதிக்க வெறிகளில் இருந்தும் பாதுகாக்கப்படும். சாதி ரீதியாக, மத ரீதியாக பல்வேறு துவேச சிந்தனைகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பரப்பப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புத் துறைகளில் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்கள் உரிய பங்கு வகிக்கவில்லையென்றால் அந்த பாதுகாப்பு நிறுவனங்களின் மூலமாக பல விபரீதங்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் வரும். அத்தகைய காட்சிகள் தற்போது பரவலாக நாட்டில் நடைபெற்று வருவதை பார்த்து வருகின்றோம். பாதுகாப்புத் துறைகளில் பங்களிப்புச் செய்வதில் முஸ்லிம் சமூகம் மிக மிக மெத்தனத்தைக் கடைபிடித்து வருவதுதான் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது. ஆட்சிப்பணியில், காவல்துறையில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசு வழங்கியுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்தி நமது பங்களிப்பை அதிகப்படுத்திட வேண்டும். இதனை ஊக்கப்படுத்திட வேண்டி, முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக தமிழக காவல்துறையில் துறை வாரியாக மொத்தமுள்ள இடங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன, எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர் என்கிற முழுமையான விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.

: The Holy Quran :::... - O people of the Scripture


cid:image007.png@01CA28CC.F85F1220
....:: 4. An-Nisaa- Women ( MADINAH) ::....
ARABIC


Ya ahla alkitabi lataghloo fee deenikum wala taqooloo AAala Allahiilla alhaqqa innama almaseehu AAeesaibnu maryama rasoolu Allahi wakalimatuhu alqahaila maryama waroohun minhu faaminoo biAllahiwarusulihi wala taqooloo thalathatun intahookhayran lakum innamaAllahu ilahun wahidunsubhanahu an yakoona lahu waladun lahu ma fee alssamawatiwama fee al-ardi wakafa biAllahiwakeelan
TAMIL Translation  | Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)


Malayalam Translation | Cheriyamudam Abdul Hammed Madani & Kunchi Muhammed Parapur

ENGLISH Translation – Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

[4:171] O people of the Scripture (Jews and Christians)! Do not exceed the limits in your religion, nor say of Allah aught but the truth. The Messiah 'Iesa (Jesus), son of Maryam (Mary), was (no more than) a Messenger of Allah and His Word, ("Be!" - and he was) which He bestowed on Maryam (Mary) and a spirit (Ruh) created by Him; so believe in Allah and His Messengers. Say not: "Three (trinity)!" Cease! (it is) better for you. For Allah is (the only) One Ilah (God), Glory be to Him (Far Exalted is He) above having a son. To Him belongs all that is in the heavens and all that is in the earth. And Allah is All-Sufficient as a Disposer of affairs.

ENGLISH TAFSIR  - TAFSIR IBN ABBAS

Allah then revealed about the Nestorian Christians of Najran who claimed that Jesus was the son of Allah and that Jesus and the Lord are partners, saying: (O People of the Scripture! Do not exaggerate) do not be extreme (in your religion) for this is not the right course (nor utter aught concerning Allah save the Truth. The Messiah, Jesus son of Mary, was only a messenger of Allah, and His word which He conveyed unto Mary) and through His word he became a created being, (and a spirit from Him) and through His command, Jesus became a son without a father. (So believe in Allah and His messengers) all the messengers including Jesus, (and say not “Three”) a son, father and wife. (Cease!) from making such a claim and repent ((it is) better for you!) than such a claim. (Allah is only One God) without a son or partner. (Far is it removed from His Transcendent Majesty that he should have a son. His is all that is in the heavens and all that is in the earth) are His servants. (And Allah is sufficient as Defender) as Lord of all created beings and He is witness of what He says about Jesus.

URDU Translation | Dr. Col Muhammad Ayub

VISIT | JOIN

Powered by RMDARIMD

- Tamil and English (Mar-2011)




VISIT | JOIN

cid:image005.png@01CBE0DF.77058390

© Since 2004 | http://www.tharjuma.com/       

ஆளூர் ஷாநவாஸ்


FRIDAY, DECEMBER 31, 2010

கடந்து போன நாட்களில், நடந்து வந்த நினைவுகள்!

சென்னைக்கு நான் வந்து இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிறது.
முதல் இரண்டு ஆண்டுகள் எந்தப் பரிணாமமும் இல்லாமல் சராசரியாக சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்வாதாரத்தைத் தேடி மாநகர வீதிகளில் அலைந்து திரியும் ஆயிரமாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதைத் தவிர, அப்போது எனக்கு வேறு எந்த அடையாளமும் இருந்ததில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கலை இலக்கியத் தளத்திலும், சமூகப் போராட்டக் களத்திலும் நான் பெற்ற கொஞ்ச அனுபவங்கள், சென்னையில் எனது இலக்கைத் தீர்மானிக்க உதவின. நாகர்கோவில் அகில இந்திய வானொலியின் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வழங்கிய அறிமுகத்தோடு, 2001 ஆம் ஆண்டு சென்னை வானொலி நிலையத்தில் நான் காலடி எடுத்து வைத்தேன்.

மனிதநேயப் பண்பாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் அன்பைப் பெற்றேன். அப்போது தீபாவளி நேரம். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் பிரபலங்கள் வந்து சென்ற வண்ணமிருந்தனர். பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு வந்தார். ஒரு மாலை வேளையில் கவிஞர் வைரமுத்து வந்தார். அவரைப் பார்த்த உடன் எனக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வைரமுத்துவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகனாக இருந்த எனக்கு, முதல் முறையாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் செய்வதறியாது திகைத்தேன். ஒரு புன்முறுவலோடும், சில வார்த்தைகளோடும் அவர் என்னைக் கடந்து போனார்.

பிரபலங்களை அடிக்கடி சந்திக்கும் களமாக வானொலி நிலையம் இருந்ததால் அங்கே பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த சந்திப்புகள் தந்த போதையில் நான் அதிகம் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது வானொலி நிலையத்தில் நமது இருப்பை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தேன். அதே சம காலத்தில் நான் தமுமுக வின் தீவிர அபிமானியாகவும் இருந்தேன். குமரிமாவட்ட தமுமுக மாணவரணி பொறுப்பாளராக நான் செயலாற்றியதனால், மாநில மாணவரணி செயலாளராக இருந்த அண்ணன் அன்சாரியுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவரை சந்திக்க மண்ணடியிலுள்ள தமுமுக அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் பேராசிரியர் ஹாஜா கனியுடன் நட்பு ஏற்பட்டது.
பின்னர் அன்சாரி ஒருநாள் என்னை தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது 'ஒற்றுமை' பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் நான் எழுதிய ஒரு கவிதையும் வெளியாகியிருந்தது. அதை நினைவூட்டி பேராசிரியரிடம் அன்சாரி என்னை அறிமுகப்படுத்தினார். அந்த சந்திப்புக்குப் பின் ஒற்றுமை இதழில் பணியாற்றும் சூழல் மலர்ந்தது. பின்னர் 'உணர்வு' இதழ் வரை அது தொடர்ந்தது. உணர்வு ஆசிரியர் பிஜே அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. உணர்வு மற்றும் ஒற்றுமை இதழ்களுக்கான பேட்டிகள் எடுக்க தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் மதசார்பற்ற சக்திகளை சந்தித்தேன்.
அதே காலகட்டத்தில் அண்ணன் பாக்கர் அவர்களின் 'மீடியா வேல்ட்' நிறுவனத்தின் சார்பில் 'இந்த வாரச் செய்திகள்' என்னும் நிகழ்ச்சி 'வின் டிவி'யில் ஒளிபரப்பானது. எனது ஊடக ஆர்வத்தை அறிந்து கொண்ட பிஜே, என்னை செய்தி வாசிக்கச் செல்லும்படி தூண்டினார். நான் துணிந்து செய்தி வாசித்தேன். காட்சி ஊடகத்துடனான எனது உறவு அன்றிலிருந்து தொடங்கியது. அப்போது நண்பர் CMN.சலீம் அவர்களுடன் இணைந்தும் பல்வேறு காட்சி ஊடகப் பதிவுகளை செய்து வந்தேன். ஒரே நேரத்தில் அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் செயலாற்றும் சூழல் அமைந்ததமையால் நான் வானொலியை அடியோடு மறந்தேன்.
2002 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்க கொழும்பு சென்றேன். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் அது. தமிழகம் மற்றும் இலங்கையை சார்ந்த இலக்கியவாதிகளுடன் நட்பு ஏற்பட்டது. அகதி முகாம்களில் அல்லல்படும் இலங்கை முஸ்லிம்களின் நிலையைப் பதிவு செய்தேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நூர்தீன் மசூர் ஆகியோரை பேட்டி எடுத்தேன். எனது இலங்கைப் பயண பதிவுகள் அனைத்தும் ஒற்றுமை இதழில் முகப்போவியமாக வெளிவந்தது.

2003 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைகளுக்கு எதிரான எனது 'தோட்டாக்கள்' கவிதைத் தொகுப்பு நூல் வெளியானது. தமிழகத்தின் பிரபல கவிஞர்கள் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் இந்துத்துவ மதவெறிக்கு எதிரான கவிதைகளை எழுதிப் பெற்று நூலாகத் தொகுத்தேன். அப்போதுதான் 'சமநிலைச் சமுதாயம்' இதழ் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனரான ஜாபர்தீன் ஹாஜியாருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. இலங்கைக்கு ஒரே விமானத்தில் நாங்கள் பயணம் செய்யும்போது ஏற்பட்ட நட்பு அது. அவரும் எனது இதயத்திற்கு இனிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் இணைந்து தொடங்கிய பத்திரிகை என்பதால் நான் சமநிலையில் எழுத ஆரம்பித்தேன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடாவிலிருந்து விடுதலை ஆனவுடன் அவரை சந்தித்து ஒரு சிறப்புப் பேட்டி எடுத்தேன். சமநிலையில் அது முகப்போவியமாக வெளிவந்தது.
சமநிலை ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவியுடன் நட்பு துளிர்த்தது. அவரது கைவண்ணத்தில் எனது தோட்டாக்கள் தொகுப்பு மிகச் சிறப்பான வடிவம் பெற்றது. பின்னர் தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில்,
கவிக்கோ, அ.மார்க்ஸ், பெரியார்தாசன், திரு.வீரபாண்டியன், சா.பீட்டர் அல்போன்ஸ் ஆகிய அறிஞர்கள் பங்கேற்க மிகச் சிறப்பான வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி வெறியர்களால் உடலில் மல நீர் ஊற்றப்பட்டு இழிவு படுத்தப்பட்ட, கீழ உரப்பனூர் முத்துமாரி என்னும் தலித் சகோதரியின் கரங்களால் நூலை வெளியிடச் செய்து, கோவை கலவரத்தில் மகனை இழந்த ஹசனார் அவர்களை பெற்றுக்கொள்ளச் செய்தேன்.
தோட்டாக்கள் தொகுப்பின் போது கவிஞர் கனிமொழி அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. நூல் வெளியானவுடன் அதை கனிமொழிக்கு நேரில் வழங்கினேன். அவர் மூலம் கலைஞர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அறிவாலயத்தில் கலைஞரை சந்தித்தேன். தோட்டாக்களை கொடுத்தேன். அதன் வடிவமைப்பை பார்த்து பாராட்டினார். 'கனி சொன்னதும் நான் யாரோ பெரிய ஆளுன்னு நெனச்சேன்..நீ ரொம்ப சின்னப் பையனா இருக்கியய்யா' என்று வியந்தார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
2004 ஆம் ஆண்டு 'கல்ப் ஏசியா விஷன் நெட்வொர்க்' சார்பில், வின் டிவியில் ஒளிபரப்பான வளைகுடா செய்திகள் நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக செயலாற்றினேன். அதன் மூலம் எனக்கு மிகப்பெரும் ஊடக வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து 'தீபங்கள்' என்னும் நிகழ்ச்சியை இயக்கினேன்.
நாகூர் ஹனிபா, தோப்பில் மீரான், கவிக்கோ, மணவை முஸ்தபா , வலம்புரி ஜான், பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், பெரியார் தாசன், மேத்தா, இன்குலாப் என ஏராளமான ஆளுமைகளின் வாழ்க்கைப் பயணத்தை காட்சி வடிவில் பதிவு செய்தேன்.
அதே ஆண்டில் தமுமுகவில் இருந்து பிஜே வெளியேறினார். அவர் வெளியேறியதை மகிச்சியோடு வரவேற்றேன். தமுமுக முழுக்க முழுக்க அரசியல் சக்தியாய் பரிணாமம் அடைய வேண்டும் என்று அதிகம் விரும்பினேன். தமுமுகவின் 'உணர்வு' இதழை அவர் அபகரித்து சென்றதால் தமுமுகவுக்கென ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. நண்பர் சாதிக் பாஸா தனது 'மக்கள் உரிமை' இதழை இயக்கத்திற்காக கொடுத்தார். மக்கள் உரிமையை உருவாக்கவும் அதை மக்கள் மயப்படுத்தவும் இயன்ற அளவு முயற்சி எடுத்தேன். பின்னர் காட்சி ஊடகத்திலும் தமுமுகவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதால் அதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை பேராசிரியரின் வழிகாட்டுதலோடு மேற்கொண்டேன்.

காட்சி ஊடகத்தில் சமூக உரிமைகள் பற்றிய பதிவுகளோடு, கலை இலக்கியம் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளையும் கலந்து வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடாய் 2005 ஆம் ஆண்டு இறுதியில் 'மீடியா ஸ்டெப்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.
எல்லாத் திருநாள்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகள் முஸ்லிம்களின் திருநாள்களை கண்டுகொள்வதில்லை என்பதனால் அதை மாற்றுவதற்கு, ஜெயா டிவியில் தியாகத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கினேன். முஸ்லிம்கள் குறித்து முஸ்லிமல்லாத மக்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் விறுவிறுப்பான நிகழ்ச்சியாக அது அமைந்தது.

2006 ஆம் ஆண்டில் எனக்கு குறும்படங்கள் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு குறும்படத்துக்கான கதையை எழுதிவிட்டு அதை படமாக்கும் முயற்சியை மேற்கொண்டேன். அத்துறை குறித்த ஆழமான அறிவு கொண்ட நண்பர் கெங்கை குமார் அவர்களை சந்தித்து எனது குறும்படக் கதையை கூறினேன். அவர் கதையை கேட்டுவிட்டு இதை குறும்படமாக எடுப்பதைவிட ஆவணப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் சொல்லித் தந்தார்.அவரது கருத்தையே எனது சகோதரர் சியாதும் எதிரொலித்தார். பின்னர் ஆவணப்படங்கள் குறித்து நிறைய வாசித்தேன். நிழல் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன். அவர் பயனுள்ள தகவல்களைத் தந்தார். முழுவீச்சில் களமிறங்கி படப்பிடிப்பு செய்தேன். நண்பர் புதுமடம் அனீஸ் அதற்குத் துணை நின்றார்.சென்னை பிலிம் சேம்பரில் 'பிறப்புரிமை' ஆவணப்படத் திரையிடலும், வெளியீடும் நடைபெற்றது.செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி படத்தை வெளியிட்டார். அரசியல் தலைவர்களும், சமூக
ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பிறப்புரிமை படத்தின் குறுந்தகட்டை எல்லா முக்கிய தலைவர்களையும் சந்தித்து கொடுத்தேன். படத்தைப் பற்றி அனைத்துப் பத்திரிகைகளும் விமர்சனம் எழுதின.
'நிழல்' இயக்கத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பிறப்புரிமைக்கு விருது வழங்கப்பட்டது. பருத்திவீரன் பட வேலைகளில் மூழ்கியிருந்த இயக்குநர் அமீர் அவர்கள் நெருக்கடியான நிலையிலும் திருப்பூருக்கு வந்து நிகழ்வில் பங்கேற்று விருது வழங்கி சிறப்பித்தார்.
பிறப்புரிமைக்கு கிடைத்த விருது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. விருது பெற்ற கையோடு கோவை சிறைக்குச் சென்று அப்துல் நாசர் மதானியை சந்தித்தேன். அவருடனான அந்த நீண்ட சந்திப்பு என்னை உசுப்பியது. சிறையிலிருந்து நான் வெளியே வந்த அடுத்த நொடியிலிருந்து 'கைதியின் கதை' ஆவணப்படத்திற்கான வேலைகள் வேகம் பெற்றன. கேரளாவுக்கு விரைந்தேன். மதானியின் பெற்றோரையும், மனைவியையும், கட்சியினரையும் சந்தித்து கருத்துக்களைப் பதிவு செய்தேன். இந்தியாவின் தலை சிறந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். இயலாத நிலையிலும் எழுந்திருந்து ஒரு போர் வீரனைப்போல கருத்துப் பதிவு செய்தார் அவர்.
2007 ஆம் ஆண்டு, காவல்துறையின் கடும் நெருக்கடிக்கு இடையே, சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் 'கைதியின் கதை' வெளியீட்டு விழா நடைபெற்றது. எனது நேசத்திற்குரிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட, அன்பு அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். பேராசிரியர்.அ.மார்க்ஸ், இயக்குநர் அமீர், பாரதி கிருஷ்ணகுமார்,
நிழல்.திருநாவுக்கரசு ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விழாவாக அது அமைந்தது. 'பிறப்புரிமைக்கு' கிடைத்ததை விட கூடுதலான ஊடக வெளிச்சம் 'கைதியின் கதைக்கு' கிடைத்தது.
பின்னர் தொழில் ரீதியிலான முயற்சிகளில் ஈடுபட்டதனால் சுமார் இரண்டு ஆண்டுகள் எந்தவொரு படைப்பையும் என்னால் வெளியிட முடியவில்லை. என்றாலும், பதிவு செய்யப்படாத பல முக்கிய விசயங்களை காட்சி வடிவில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சுழன்று கொண்டே இருந்தது. குறிப்பாக காயிதே மில்லத் குறித்து ஒரு விரிவான ஆவணப்படம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாளாகவே எனக்குத் தோன்றியது. அதற்கான முயற்சிகளை நான் பலமுறை மேற்கொண்டும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற எனது திருமண வரவேற்பில் வாழ்த்துரையாற்றிய திருமாவளவன் அவர்கள் எனது ஆவணப்பட முயற்சிகளைக் குறித்து விரிவாகப் பேசினார். அந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த நண்பர் அன்சாரி அவர்கள் அண்ணன்.திருமாவின் உரையை கூர்ந்து கவனித்தார். பின்னர் அன்சாரியை நான் சந்தித்தபோது காயிதே மில்லத் ஆவணப்படம் குறித்து பேசுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அவர் மனமகிழ்ச்சியோடு படத்தை தயாரிக்க முன்வந்தார். சென்னை சவேரா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஆவணப்பட அறிவிப்பை வெளியிட்டோம்.
காயிதே மில்லத் ஆவணப்பட பதிவுக்காக களமிறங்கிய நாள்முதல் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவந்தது. எனது முதல் இரண்டு படங்களை விட இதை உருவாக்குவதில் அதிக காலமும், உழைப்பும் தேவைப்பட்டது. ஒரு வழியாக அது இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடவே காயிதே மில்லத் பற்றிய அழகிய நூலையும் உருவாக்கி உள்ளேன். இறையருளால் அவற்றின் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்த ஆர்வமாக இருக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் எனது சுழற்சி பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளது.தீவிர இயக்கவாதியாக இருந்த நான் இன்றைக்கு தீவிர இயக்க எதிர்ப்பாளனாக மாறியுள்ளேன்.முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சியின் நம்பிக்கை கீற்றுகளாக நான் யாரைக் கருதினேனோ அவர்களுடனேயே இன்று முரண்பட்டு நிற்கிறேன். அவர்களின் தொலைநோக்கற்ற செயல்களினால் அவநம்பிக்கை அடைந்துள்ளேன். நான் பங்கெடுத்த களங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத விசயங்களை தெளிவாக எதிர்த்துள்ளேன். நல்லவைகள் எங்கிருந்தாலும் ஆதரித்தும் வருகிறேன்.

2001 முதல் 2010 வரை இந்த சென்னை வாழ்க்கையில் நெகிழ்ச்சியாகவும், நெருக்கடியாகவும் தேதிகள் கிழிந்திருக்கின்றன. இனி வரும் நாட்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் மனநிறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இலக்குகளை எட்டிப் பிடிக்கும் எனது வேட்கையின் சூட்டில் என்னைக் கவிழ்க்கும் சதிகள் பொசுங்க வேண்டும் என வேண்டுகிறேன். பலங்களுக்கு ஈடாக என்னுள் பரவிக்கிடக்கும் பலவீனங்களை முற்றிலுமாக ஒழிக்க விளைகிறேன்.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது.
இளமையை இழந்து முதுமையை சுமக்கும் நிலையை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் நமது ஆயுளை இழக்கிறோம். இழப்பு எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்? எனவே கொண்டாட்டங்களை விட்டுவிட்டு
நம்மை நாமே மீளாய்வு செய்யவும், அடுத்தக் கட்ட நகர்வுக்கு திட்டமிடவும் முயற்சி செய்வோம்.

அன்புடன்
ஆளூர் ஷாநவாஸ்
31 -12 -2010 ,சென்னை.

harjuma Friday Post :::... - Sahih Al Buhari - (Mar-2011)






VISIT | JOIN


cid:image005.png@01CBE0DF.77058390